Sunday, August 16, 2009
கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் மரபணு குறைபாட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க இயலும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும், மரபணு குறைபாடு (டவுன்ஸ் சிண்ட்ரோம்) உள்ள ஒரு குழந்தை பிறக்கிறது. இது முற்றிலும் மரபியல் சார்ந்த குறைபாடு. பெண்கள் கருத்தரித்த 11 முதல் 13 வாரத்துக்குள் ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்வதன் மூலம், குழந்தைக்கு இத்தகைய குறைபாடு உள்ளதா, இல்லையா என்று கண்டுபிடித்து விட முடியும். முதலில் ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அந்த பரிசோதனையில் குறைபாடுகளுக்கான அறிகுறிகள் தெரியவந்தால், தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு இலவசமாக ஸ்கேன் செய்யப்படும்.உலக டவுன்ஸ் சிண்ட்ரோம் தினம், மார்ச் 21ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
உடல் வெப்ப நிலை
நமது உடல் சராசரியாக 97.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை தாங்கக் கூடியது. இது அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வரை செல்லலாம்.கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். அப்போது உடம்பில் இருந்து அதிகபட்சமான தண்ணீரும், உப்பும் வெளியேறும்.இதனால் உடல் அதிக சூட்டை அடையும். வெப்பவாதமும், உடல் சோர்வும் ஏற்படும்.ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடல் சூட்டினால் ரத்தக் குழாய் அதிகம் விரிவடைந்து ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் கூட ஏற்படும்.எனவே கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும் போது தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதுவும் மோர், எலுமிச்சை சாறு போன்று உப்பு சேர்ந்த பானமாகக் குடிப்பது உடலின் வெப்பநிலைலை சீராக்க உதவும்.
Subscribe to:
Comments (Atom)